Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரசு மருத்துவமனையில் பெண் சாவு.டெங்கு காய்ச்சலா?

0

திருச்சி திருவானைக்காவல் நரியன் தெருவை சேர்ந்தவர் ராஜா சுகுமார், அவரது மனைவி கனகவல்லி (வயது 38). கனகவல்லிக்கு நேற்றைய தினம் உடல் நிலை சரியில்லாத காரணாத்தால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து வரப்பட்டார், அங்கு அவருக்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டத்தை அடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை கனகவல்லி உயிரிழந்துள்ளார். அவருக்கு டெங்கு அறிகுறி இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் இன்றைய தினம் காய்ச்சல் நோயால் 30க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள், அவர்களில் 8 பேர் உள்சிகிச்சை நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை திருச்சி அரசு பொது மருத்துவமனையில் யாருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.