Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்.

0

 

திருச்சி சத்திரம் பஸ் நிலையம்
காமராஜர் சிலை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகே அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து தேவதானம், சிந்தாமணி கிராம நிர்வாக அதிகாரி அனீஸ் பாத்திமா கோட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவரின் பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? எப்படி இறந்தார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.