Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் சோகம்:திருமணமான 20-வது நாளில் புது மாப்பிள்ளை தற்கொலை

0

 

திருச்சி:

திருமணமான 20 வது நாளில் புது மாப்பிள்ளை
தூக்கு போட்டு சாவு.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் மணிவேல். இவரது மகன் பன்னீர்செல்வம் (வயது 29 ). கொத்தனார்.
இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனது அத்தை மகளான திருச்சி கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வரும் கீர்த்தனா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

வழக்கம் போல் இரவு கணவன் மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கினர். பின்னர் அதிகாலை 4.30 மணி அளவில் கீர்த்தனா எழுந்து குளிக்க சென்றார்.அந்த நேரத்தில் பன்னீர்செல்வம் வயிற்று வலி அதிகமாகவே மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது தந்தை மணிவேல் அளித்த புகாரின் அடிப்படையில் எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார் .

பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பிரேத பரிசோதனைக்கு பின் பன்னீர் செல்வத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 20 நாளிலேயே புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.