எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட கோரி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்ட நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம்.
எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட கோரி ஆசிரியர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்ட நடவடிக்கைக் குழு ( டிட்டோஜாக் ) சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத்தலைவர் சிவக்குமார் கோரிக்கைகளை விளக்கி ஆர்ப்பாட்டப் பேருரை ஆற்றினார்
இதில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அந்தோணி எட்வட்ராஜ், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி *மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உள்பட 500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்
கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் அளிக்கப்பட்ட உறுதிக்கு மாறாக பி.எட். பயிற்சி மாணவர்களை பள்ளிகளுக்கு ஆய்வுக்கு அனுமதிப்பதை கைவிடக்கோரியும்,
எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுவதுமாக கைவிட வலியுறுத்தியும், பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தை 3 மாதத்திற்கு ஒரு முறை கூட்ட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.