Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை 4 சட்டமன்ற தொகுதியிலும் சிறப்பாக மேற்கொள்வது குறித்து அதிமுக வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்.

0

 

அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிச்சாமியில் அறிவுறுத்தலின்படி

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அவர்களின் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மதுரையில் நடைபெற்ற வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டினை சிறப்பாக தலைமையேற்று நடத்திய கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை

பாராட்டியும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி, மகளிர் குழு, பாசறை குழு ஆகியவற்றை 4 சட்டமன்ற தொகுதியிலும் சிறப்பாக மேற்கொள்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல், எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், அம்மா பேரவை இணை செயலாளர் செல்வராசு, முன்னாள் அமைச்சர் பூனாட்சி, மாவட்ட இணை செயலாளர் இந்திராகாந்தி, பரமேஸ்வரி முருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் ரமேஷ், புல்லட் ஜான், பேரூர் கண்ணதாசன், அறிவழகன், ஏவூர் நாகராஜன், அன்னை கோபால், பொன்.காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், நகர செயலாளர்கள் சுப்ரமணியன், அமைதி பாலு, ஒன்றிய செயலாளர்கள் ஆதாளி, செல்வராஜ், முத்துகருப்பன், எல்.ஜெயக்குமார், ஜெயராமன், குமரவேல், பிரகாஷவேல், ஜெயக்குமார், ஜெயம், நடராஜன், அழகாபுரி செல்வராஜ், ராம் மோகன், வெங்கடேசன், பேரூராட்சி கழக செயலாளர்கள் செந்தில்குமார், ராமச்சந்திரன், துரை சக்திவேல், திருஞானம் பிள்ளை, சம்பத்குமார், ராஜேந்திரன், ராஜாங்கம், பகுதி கழக செயலாளர் டைமண்ட் திருப்பதி, சுந்தர்ராஜன், மற்றும் நெடுமாறன், ஶ்ரீரங்கம் ரவிசங்கர், மருதை, ஈஞ்சூர் ராமு, நடேசன், கவுன்சிலர் சுந்தரமூர்த்தி, எட்டரை அன்பரசு, அரவிந்த், மைக்கேல், பிரதீப், சுரேஷ், வட்ட செயலாளர்கள் கலைமணி, பொன்னர், தமிழரசன், மகேஷ்வரன், கொளஞ்சி, ராஜு, சேகர், மனோகரன், செந்தில், பிரகாஷ், செல்வம் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.