திருச்சி: ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கடைகளை அடித்து உடைத்த மாநகராட்சி அதிகாரிகள். லஞ்சம் பெறும் கவுன்சிலர் கலைச்செல்வி கண்டு கொள்ளவில்லை.
திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த சுமாா் 50 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினா்.

திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில், சாலை மற்றும் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து புகாா்கள் கூறப்பட்டது . ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு ஆட்சியா் மாநகராட்சிக்கு உத்தரவிட்டாா். இதன்பேரில், திருச்சி மாநகராட்சி உதவி ஆணையா் சண்முகம், இளநிலை பொறியாளா் பாவா பக்ருதீன், சுகாதார ஆய்வாளா் பிரின்ஸ் சகாயராஜ் உள்ளிட்டோரடங்கிய குழுவினா், கண்டோன்மெண்ட் காவல் ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையிலான போலீஸாா் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனா்.அப்போது டிபன் கடை, ஜூஸ் வண்டி போன்றவற்றை பொக்லின் இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் அடித்து உடைத்து உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் உள்பகுதி, வில்லியம்ஸ் சாலை, பாரதிதாசன் சாலை, ராக்கின்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகள், சில கடைகளின் முன்பகுதி என சுமாா் 50-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அங்கு வியாபாரிகள் திரண்டதால் பதற்றமான சூழல் நிலவியது. பாதுகாப்பு பணிகளில் கண்டோன்மெண்ட் உதவி ஆணையர் கென்னடி தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.