Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழ்நாடு பயோ பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்க முதலாம் ஆண்டு வருடாந்திர கூட்டதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.

0

தமிழ்நாடு பயோ பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்க வருடாந்திர முதலாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்.

தமிழ்நாடு பயோ பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்க வருடாந்திர முதலாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பி. எல். ஏ. கிருஷ்ணா இன் ஓட்டலில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். காரைக்கால் பஜன் கோ வேளாண் கல்லூரி விஞ்ஞானி காண்டீபன் முன்னிலை வகித்தார். அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி பூச்சியியல் துறை தலைவர் அம்பேத்கார் சிறப்புரையாற்றினார்‌‌.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள்
ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.


இயற்கை வேளாண் இடுப் பொருட்களை அதிகளவில் விவசாயிகளுக்கு பரிந்துரை செய்து இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும்.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பயோ பொருட்கள் உற்பத்தியை அதிகரிப்பதுடன் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறு வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும்.

பகுதிவாரியாக விவசாயிகளின் சந்தேகங்களை தீர்ப்பதுடன் உற்பத்தியாளர்கள் குழுக்களாக பிரிந்து விவசாயிகளுக்கு உற்பத்தியை அதிகரிப்பது குறித்த கருத்தரங்குகள் நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் கூட்டத்தில் பயோ உற்பத்தியாளர்களுக்கு மூலப் பொருட்கள் விநியோகம் செய்யக்கூடிய அனைத்து நிறுவனங்கள் சார்பில் 15க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு ஷில்டுகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள பயோ பொருட்கள் உற்பத்தியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.