வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த வையம்பட்டி காவல் நிலைய எஸ்ஐ மற்றும் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்.எஸ் பி அதிரடி உத்தரவு.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாம்பாட்டிப்பட்டியை சேர்ந்தவர் மருதை (வயது 75). இவர், குடும்ப தகராறில் பேரன் பாஸ்கர் (வயது 23) தன்னை தாக்கியதாக வையம்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
இதையடுத்து பாஸ்கரை அழைத்து வையம்பட்டி எஸ்ஐ பிரவீன்குமார் (வயது 32), காவலர் செந்தில்குமார் (28) ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது அவரை போலீசார் லத்தியால் தாக்கியதாகவும், ஷூ காலால் மிதித்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த பாஸ்கர், மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி அறிந்ததும் எஸ்பி சுஜித்குமார் விசாரணை நடத்தினார். அதில், பாஸ்கரை போலீசார் தாக்கியது உறுதியானது.
இதையடுத்து எஸ்ஐ பிரவீன்குமார், காவலர் செந்தில்குமார் ஆகியோரை திருச்சி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி சுஜித்குமார் இன்று உத்தரவிட்டார்.