Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இன்று முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாண காத்திருப்பு போராட்டம் தொடக்கம்.

0

'- Advertisement -

 

விவசாய விலை பொருட்கள் இரண்டு மடங்கு லாபம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் அரை நிர்வாண காத்திருப்பு போராட்டம்.

திருச்சி சிந்தாமணி பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள்
விவசாய விலை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுக்காமல்
விவசாயிகளை வஞ்சித்து வருகிறத.

Suresh

ஒரு கிலோ நெல்லுக்கு 54ரூபாயும் ஒரு டன் கரும்புக்கு 8,100 ரூபாய் வழங்க வேண்டும்,

விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்,

மேகதாது அணையை கட்டக்கூடாது கோதாவரி காவேரி இணைப்பிற்கு நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல் விவசாயிகள் அரை நிர்வாண தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டத்தில் மாநில துணைத்தலைவர்மேகராஜன், மாநில சட்ட ஆலோசகர் முத்துகிருஷ்ணன், மாநில செயலாளர் ஜான் மெல்கியராஜ்,மகளிர் அணி மாநில தலைவர் நச்சம்மாள்,மாநில செய்தி தொடர்பாளர் பிரேம்குமார் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.