அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். தெற்கு மாவட்ட செயலாளர் குமார் அறிக்கை.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அஇஅதிமுக கழக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமாம், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்தும், அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதை கண்டித்தும், இவைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருந்து வரும் பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் திருச்சி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில்..
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நாளை காலை 10மணியளவில் நடைபெறவுள்ளது.
அதுசமயம் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தை சார்ந்த மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட, கிளை, வார்டு கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மற்றும் கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்
என ப.குமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.