பெண்ணின் நில பத்திரத்தை தனது பெயருக்கு மோசடியாக மாற்றியவர் மீது வழக்கு.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சித்திரப்பட்டி வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவி இவரது மனைவி சரோஜா இவர்கள் தனது குடும்ப தேவைகளுக்காக கடந்த 2015ல் துறையூர் சோபனாபுரம் முத்து கங்கணி தெரு பகுதியைச் சேர்ந்த ராமராஜ் (வயது58) என்பவரிடம் ரூ. 3 லட்சம் வட்டிக்கு கடனாக வாங்கியுள்ளார்.
இதற்காக தனத. நில பத்திரத்தை அடமானமாக வைத்தார்.
பின்னர் கணவன் மனைவி இருவரும் மாதந்தோறும் அவருக்கு வட்டி தொகை செலுத்தி வந்தனர். பின்னர் அடமானமாக வைத்த நில பத்திரத்தை திரும்ப கேட்டனர். ஆனால் ராமராஜ் அந்த நில பத்திரத்தை கொடுக்க மறுத்துவிட்டார். இதற்கிடையே அந்த நில பத்திரத்தை துறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ராமராஜ் தனது பெயருக்கு மாற்றி மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
பின்னர் ராமராஜ் வாங்கிய தொகைக்கு மேலும் ரூ.9 லட்சம் செலுத்த வேண்டும்.
அந்தத் தொகையை செலுத்திய பின்னரே நில பத்திரத்தை திரும்பத் தருவேன் என கூறி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சரோஜா துறையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ராமராஜ் மீது மோசடி மற்றும் கந்துவட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.