Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பின் சார்பில் விருதுகள் வழங்கி நலத்திட்டங்களை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

0

 

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு (சிறந்த சமூக சேவைக்கான மாவட்ட ஆட்சியரின் விருது பெற்ற அமைப்பு) சார்பில்
முப்பெரும் விழா மற்றும்
26 ஆம் ஆண்டு விழா
சமூக சேவையாளர்களுக்கு பாராட்டு விழா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல் மற்றும் ஏழை மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குதல் மற்றும் ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பின் தலைவரும் புனித வளனார் கல்லூரியின் கிரிக்கெட் வீரருமான மறைந்த விக்னேஷ்வரன் படத்திறப்பு விழா திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பின்புறம் பட்டர்வொர்த் சாலையில் உள்ள அன்னதான சமாஜம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் தலைமை சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை அமைச்சர் . அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாணவிகளுக்கு பாராட்டு சான்று பள்ளி உபகரண பொருட்கள் மற்றும் மரகன்றுகளை வழங்கி சிறப்பு செய்தார் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவர்கள் கலந்து கொண்டு விருதுகள் மற்றும் நல திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டல -3 தலைவர் மு. மதிவாணன் தலைமை தாங்கினார் 13வது மாமன்ற உறுப்பினர் மணிமேகலை ராஜபாண்டி, மருந்துகடை ஆர்.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

மேலும் இந்நிகழ்வில் திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக சமூக சேவை செய்து வரும் பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகளும் சமூக ஆர்வலர்களுமான ஸ்கோர் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் பத்மஸ்ரீ எம்.சுப்புராமன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் மண்டல முதுநிலை மேலாளர் முனைவர் ப. கலைச்செல்வன் நேரு யுவ கேந்திர மேனாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே. சுப்பிரமணியன் DRCP N.ராமு Dr. D. சிவசுப்பிரமணியம் நல்லாசிரியர் விருது பெற்ற எஸ்.முரளிகிருஷ்ணன் நுகர்வோர் பாதுகாப்பு குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் ஆர். கோவிந்தராஜ் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலர் ஜவஹர் ஹாசன் தென்னக நுகர்வோர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த மனித விடியல் பி. மோகன் பெண்கள் மேம்பாட்டு திட்ட அமைப்பின் இயக்குனர் எம். சீதாலட்சுமி அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் சமூக ஆர்வலர் மோகன்ராம் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் யோகா விஜயகுமார் மூத்த சமூக செயற்பாட்டாளர் கோவிந்தசாமி  அம்பெத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தின் நிறுவனர் பக்கிரிசாமி பக்கிரிசாமி பதிய பாதை அறக்கட்டளை நிர்வாகி தீபலெட்சுமி உலக சாதனையாளர் ஆர்ம்ஸ்ட்ராங் ரபி வாழ்நாள் சாதனையாளர் சீனிவாச பிரசாத் கண்மலை எடிசன் நோ வுட் வேஸ்ட் ராமகிருஷ்ணன் அக்னி சிறகுகள் மகேந்திரன் சமூக ஆர்வலர் தசரத ராமன் நாட்டுக்கு நல்லது செய்வோம் கணேஷ் முத்தையா உதவும் கரங்கள் நிர்வாகி தனபால் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுக்கு சேவை செம்மல் விருது வழங்கப்பட்டது

 

இதனை தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்று மற்றும் பரிசுகள் மற்றும் ஏழை மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் தொடக்கத்தில் வரவேற்புரையை ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பின் நிறுவனர் Dr.P.சங்கர் வழங்கினார்.

நிகழ்வினை யோகா விஜயகுமார் அவர்கள் தொகுத்து வழங்கினார் இந்நிகழ்வில் பழ வகையிலான கொய்யா நெல்லி கொடுக்காபள்ளி உள்ளிட்ட மரகன்றுகளை அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் அமைப்பின் விளையாட்டு பிரிவு இணை செயலாளரும் தேசிய குத்துச்சண்டை விளையாட்டு பயிற்சியாளருமான எழில் மணி மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா இணை செயலர் அல்லி கொடி ஆகியோர் ஏற்பாடு செய்து வழங்கினர்

இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பின் நிறுவனர் சங்கர் தலைமையில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்

Leave A Reply

Your email address will not be published.