திருச்சி பிரபல நகைக்கடை பெண் ஊழியர் திடீர் மாயம்.
ஸ்ரீரங்கம் நேரு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் ராஜா ஸ்ரீ. இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய ராஜா ஸ்ரீ வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து அவரது தந்தை ரவிச்சந்திரன் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.