போலி பத்திரம் தயாரித்து ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முயன்ற புங்கனூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரனுக்கு போலீசார் வலைவீச்சு.

திருச்சி, ஸ்ரீரங்கம் தாலுகா, தாயனூர் கிராமத்தில் கட்டுப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள சொத்தானது திருச்சி, தென்னூரில், உள்ள பழனிச்சாமி பிள்ளை டிரஸ்ட்க்கு சொந்தமானதாகும். மேற்படி சொத்துக்களை புங்கனூர் பகுதியை சேர்ந்த நபர்கள் குத்தகை செய்து வந்த நிலையில் சொத்தின் உரிமையாளரான பழனிச்சாமி பிள்ளை டிரஸ்டின் பொறுப்பாளர்கள் சென்னையில் இருந்ததை பயன்படுத்திக் கொண்டு திமுகவைச் சேர்ந்த மணிகண்டம் யூனியன் புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரனும் அவரது உறவினர் செந்தில்குமாரும் சேர்ந்து சுமார் 2 ஏக்கர் சொத்தினை அபகரித்து பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய தீர்மானித்து அதன் பேரில் புங்கனூர் பஞ்சாயத்து ஆபீஸில் வேலை செய்த ராஜேந்திரன் என்பவரை சொத்தின் உரிமையாளர் மகன் போல சித்தரித்து அவரது பெயர் வெங்கடாசலம் என மாற்றம் செய்து அந்த பெயரில் போல் ஆதார் கார்டு மற்றும் சொத்தின் உரிமையாளர் இறந்ததற்கு போலி இறப்பு சான்றிதழ், போலி வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவைகளை தயார் செய்து திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பத்திரத்தை ஆள் மாறாட்டம் செய்து பத்திரம் பதிவு செய்துள்ளனர்.
மேற்படி பத்திரம் பதிவு செய்த விபரம் தெரிந்தவுடன் சொத்தின் ட்ரஸ்ட்டிகளில் ஒருவரான ரமா கார்த்திகேயன் அளித்த கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்த திருச்சி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு (ரூரல்) காவல் துணை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையில் மேற்படி போலி பத்திரமானது புங்கனூர் பஞ்சாயத்து ஆபீஸில் பணி செய்த ராஜேந்திரன் அவர்களை பஞ்சாயத்து தலைவர் மற்றும் பல்வேறு நபர்கள் துணையோடு போலி ஆவணத்தை தயார் செய்து நிலத்தை அபகரித்து உள்ளனர் என்பதை தெரிந்து அதன் பேரில் குற்ற எண் 16/2023 என முதல் தகவல் அறியும் பதிவு செய்யப்பட்டு ராஜேந்திரன் என்கின்ற வெங்கடாசலம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் புங்கனூர் பஞ்சாயத்து தலைவர் தாமோதரன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.