திருச்சி தென்னூரில்
10-ம் வகுப்பு மாணவி திடீர் மாயம்.

திருச்சி தென்னூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் சுவாதி (வயது 16 ).திருச்சியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று தனது தோழியின் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற சுவாதி, வீடு திரும்பவில்லை.
இது குறித்து சுவாதியின் தந்தை தில்லை நகர் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.