திருச்சியில் கருணாநிதி சிலைக்கு மாவட்ட செயலாளர் வைரமணி மேயர் அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கலைஞர் கருணாநிதி உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வைரமணி தலைமையில் மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலையில் அண்ணா, கருணாநிதி ஆகியோர் திருஉருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து திமுககொடி ஏற்றப்பட்டு பின்னர் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கான மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,மாமன்ற உறுப்பினர்கள் காஜாமலை விஜி, போட்டோ கமால்,அந்தநல்லூர் ஒன்றிய சேர்மன் துரைராஜ் ,தில்லை நகர் கண்ணன் மற்றும் மாவட்ட, நகர, கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்