ஸ்டாலின் மது புரட்சி செய்து கொண்டிருக்கிறார்.லால்குடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் குமார்.
விடியா திமுக அரசை கண்டித்தும்,தமிழகத்தில் கள்ள சாராயத்தால் உயிர் இறப்புக்கு பொறுப்பேற்று முதல்வர் மு க ஸ்டாலின் பதவி விலக கோரியும்
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்.பி குமார் தலைமையில், லால்குடி பேருந்து நிலையம் அருகே கண்டன மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ப.குமார் கண்டன உரையின் போது…
நாம் படிக்கும் காலங்களில் பசுமை புரட்சி.வெண்மை புரட்சி என்று கேள்விப்பட்டிருக்கிறோம் பசுமைப் புரட்சி என்பது வேளாண் உற்பத்தியை பெருக்குவது என்றும் வெண்மைப் புரட்சி என்பது பால் உற்பத்தியை பெருக்குவதுஎன்றும் படுத்தி இருக்கிறோம் ஆனால் உலக வரலாற்றிலேயே முதன்முறையாகமது விற்பனையை பெருக்குவது பற்றி மது புரட்சி செய்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின் என பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகர், நிர்வாகிகள்அருணகிரி, அசோகன் சிவக்குமார் சூப்பர் நடேசன்,எஸ்.பி பாண்டியன், ராவணன், கார்த்திக் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.