காண்ட்ராக்ட் தருவதாக கூறி
திருச்சி காண்ட்ராக்டரிடம் ரூ.8 லட்சம் மோசடி
செய்த மின்வாரிய அதிகாரி மீது வழக்கு .
திருச்சி
மன்னார்புரம் முதல் தெரு நியூ காலனியை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 48 ).மின்வாரிய காண்ட்ராக்டர்.
இவர் புதுக்கோட்டை 3-ம் வீதியைச் சேர்ந்த மின்வாரிய அதிகாரி சுப்பிரமணி என்பவரை காண்ட்ராக்ட் விஷயமாக அணுகியுள்ளார். அப்போது அவர் காண்ட்ராக்ட் (ஒப்பந்த பணி) எடுத்து தருவதாக உறுதியளித்து ரூ.8 லட்சம் பணம் கேட்டுள்ளார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட பின் மின்வாரிய அதிகாரி சுப்பிரமணியன் காண்ட்ராக்டர் கொடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளார். இந்நிலையில் செந்தில்வேல் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மின்வாரிய அதிகாரி சுப்பிரமணி மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.