Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தை 9ஆண்டுக்குப் பின் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் அமைச்சர் கே.என். நேரு.

0

 

9 ஆண்டுகளுக்குப் பிறகு

திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சி ரயில்வே ஜங்சன் அரிஸ்டோ மேம்பாலம் பணிகள் முடிவுற்று நிலையில், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்காக இன்று காலை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில், திருச்சி ரயில்வே ஜங்ஷன் மேம்பாலத்தின் புதிய கட்டுமான பணிகள் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இதில் ராணுவத்திற்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதத்தால் பாலத்தின் 20 விழுக்காடு பணிகள் தடைபட்டுபோனது.

அப்பணிகள் தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் அணுகு சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று கொடியசைத்து திறந்து வைத்தார்.

இதில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் இருசக்கர வாகனங்களில் பேரணியாக பாலத்தை கடந்து சென்றனர்.

இந்த விழாவில்
பாராளுமன்ற திருச்சி தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர்
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகரா காவல் ஆணையர் சத்திய பிரியா,சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார்,மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநில பொது குழு உறுப்பினர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ், காங்கிரஸ் காங்கிரஸ் கோட்டத் தலைவர்கள் ராஜாடேனியல் ராய், பிரியங்கா பட்டேல், கனகராஜ், நேர்முக உதவியாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி ரயில்வே சந்திப்பில் அகலம் குறைந்த ரயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக புதிய மேம்பாலம் அமைக்கும் பணி இரண்டு கட்டங்களாக நிறைவடைந்துள்ளது.
முதல்கட்டமாக, அம்பேத்கர் ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பேருந்து நிலையம், இரயில்வே சந்திப்பு மற்றும் மதுரைச் சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டும் பணி முடிக்கப்பட்டு, 80% பணிகள் நிறைவடைந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை மதுரை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் ராணுவத்துக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால், இந்த பகுதியில் அணுகுசாலை அமைக்க முடியாமல் இருந்தது. பல்வேறு கட்ட தொடர் நடவடிக்கைகளுக்கு பின்னர் ராணுவத் துறைக்கு சொந்தமான நிலத்தின் மதிப்பான 8.45 கோடி ரூபாய்க்கு, சம மதிப்பிலான உள்கட்டமைப்பை நெடுஞ்சாலை துறையினர் ராணுவத்தினருக்கு அமைத்து தருவது என புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

அதனை தொடர்ந்து ராணுவத்துக்கு சொந்தமான 0.66 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் அதில் அணுகு சாலை அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கடந்த 14.05.2022 அன்று 3.53 கோடி மதிப்பீட்டில் தொடங்கி வைத்தார்.
மேம்பாலத்தில் சென்னை செல்லும் பகுதிக்கு அணுகு சாலை, ராணுவத்தின் நிலத்தை ஒட்டிய சுற்றுச்சுவர், சேவை சாலை, மழை நீர் வடிகால் அமைப்பு போன்ற கட்டுமான பணிகள் தற்சமயம் முடிவுற்றது. பாலத்தின் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு பாலத்தில் சாலை பாதுகாப்பு சிக்னல்கள் அமைக்கப்பட்டு நிறைவுற்ற இ்ப்பாலத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்.

பாலம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.