Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

குடிநீர் என்று எலி மருந்தை குடித்த வாலிபர், கொசுவர்த்தி சுருளால் ஏற்பட்ட தீ விபத்தால் முதியவர் பலி.

0

 

1)
லால்குடி அருகே
குடிநீர் என நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட வாலிபர் சாவு.

லால்குடி அருகே உள்ள கீழரசூர் திருப்பதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 60). இவர் வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்த காரணத்தால் ஒரு டம்ளரில் எலி மருந்தை தண்ணீரில் கலந்து வைத்திருந்தார். இது தெரியாமல் அவரது மகன் சங்கர் (வயது 34 ) தண்ணீர் என நினைத்து அதை குடித்து விட்டார். அடுத்த சில நிமிடங்களில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே தந்தை மணிவேல் மகனை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு கடந்த இரண்டு வாரங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் சங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கள்ளக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2.
துவரங்குறிச்சி அருகே
கொசுவர்த்தி சுருளால் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் உடல் கருகி சாவு.

திருச்சி மருங்காபுரி அக்கியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 76). இந்த முதியவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். அப்போது தனது படுக்கையின் அருகாமையில் ஒரு கொசுவர்த்தி சுருளை பற்ற வைத்தார்.
நள்ளிரவில் கொசுவத்தி நெருப்பு அவரது படுக்கை விரிப்பில் பட்டு தீப்பிடித்தது. பின்னர் வேகமாக பெட்டில் தீ பரவி உள்ளது.இதில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த முதியவர் உடல் கருகி அலறி துடித்தார். இதைத் தொடர்ந்து அவரது மகன் பாண்டியன் தந்தையை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே சிகிச்சை பலனிக்காமல் முதியவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.