Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தனியார் நிறுவனத்தில் பணம் கையாடல் செய்த ஊழியர் மன உளைச்சலில் தற்கொலை.

.

0

 

தனியார் நிறுவனத்தில் பணத்தை கையாடல் செய்த ஊழியர் தூக்கு போட்டு சாவு.

திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் திலகர் தெருவை சேர்ந்தவர் மார்ட்டின் லூதர். (வயது 56). இவர் மனைவியை கடந்த ஓராண்டாக பிரிந்து அவரது சகோதரி வீட்டில் வசித்து வருகிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த மார்ட்டின் லூதர் கம்பெனி பணம் ரூ.15 ஆயிரத்தை எடுத்துவிட்டார்.

மன உளைச்சலில் இருந்த அவர் சம்பவத்தன்று உறையூர் நவாத் தோட்டம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் உள்ள அறையில் மின்விசிறியில் பெட்சீட்டால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி மொரின் அஞ்சலா கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.