Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கள்ள சாராய சாவு:திறனற்ற முதல்வர் ஸ்டாலின்.எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.

0

 

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி நேற்று காலை திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியது:

இன்று தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் சேகர் ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கின்றேன். நேற்றிலிருந்து ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில்அதிர்ச்சியான செய்தி வெளியாகி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியாகுப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும்,பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர் அதில் 9 பேர் இறந்துள்ளதாக வந்துள்ள செய்தி வருத்தம் அளிக்கிறது. மேலும் பல பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அறிகிறேன். இது மிகுந்த வேதனை அளிக்கிறது.மேலும் இறப்புகள் நடக்குமோ என்ற அச்சத்தில் அவர்களின் உறவினர்களும், குடும்பத்தினரும் இருந்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் செங்கல்பட்டு மாவட்டம் சுக்கானுர் பெருங்கடலை பகுதியில் போலி மதுபானம் அருந்திய 4 பேர் இறந்துள்ள தகவலும் வந்துள்ளது.

 

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார்

 

நான் பலமுறை சொல்லி இருக்கிறேன் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. ஒரு பொம்மையான திறனற்ற முதல்வர் தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறார்.
நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கையின் போது கள்ளச்சாராயம் தொடர்பாக பேசியிருக்கின்றேன்.
அதனைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. அதேபோன்று மரக்காணத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக சில பத்திரிகைகளிலும் செய்திகள் வந்துள்ளது.
அதைப் பார்த்தாவது விழித்துக் கொண்டு வேகமாக துரிதமாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த இறப்புகளை தடுத்து நிறுத்தி இருக்கலாம். இந்த கள்ளச்சாராய உயிர் இழப்புகளுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் முழு பொறுப்பெடுத்து தார்மீகமாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் இன்ஜினியர் ராஜா.

 

தமிழகத்தில் கொலை, கொள்ளை திருட்டு அதிகரித்துள்ளன. பாலியல் வன்கொடுமை மற்றும் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழகத்தின் டிஜிபி முதலில் கஞ்சாவை ஒழிப்பதற்காக 2.0 என்றும், அதன் பின்னர் 3.0 என்றும், இப்போது 4.2 போட்டுக் கொண்டிருக்கிறார். சட்டரீதியாககள்ள சாராயத்தை தடை செய்ய இந்த முதல்வருக்கு திறமை இல்லை. காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.குடும்ப உறுப்பினர்கள் தலையீடு அதிகமாக இருக்கிறது.
கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நாளை (16 ந்தேதி)|காலை மரக்காணம் பகுதிக்கு சென்று இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருக்கிறேன் அதே போன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் செல்ல இருக்கின்றேன் தமிழகத்தில் 24 மணி நேரமும் டாஸ்மாக் பார்கள் திறந்து இருக்கின்றன. அதிமுக ஆட்சியில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே கடைகள் திறந்து இருந்தன. அதேபோன்று தற்போது போலி மதுபானங்களும் அதிகம் விற்கப்படுகிறது.இது குறித்து தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை வருமானத்தை மட்டுமே பார்க்கிறார்கள் மக்கள் பிரச்சனைகளை பற்றி எழும் முன்னையளவும் அவர்கள் சிந்திக்கவில்லை.500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக தெரிவித்து விட்டு ஆயிரம் சில்லறை கடைகளை திறந்து இருக்கிறார்கள்.
திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு இனிமையான நிகழ்வு அந்த திருமண மண்டபத்திலும் மதுபானம் விற்கலாம் என இந்த அரசு கொண்டு வந்தது அதேபோன்று விளையாட்டு மைதானத்திலும் மதுவை விற்கலாம் என கொண்டு வந்தார்கள் இந்த அரசாங்கம் மதுவை ஊக்குவிக்கும் அரசாங்கமாக இருக்கிறது இந்த கள்ளச்சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்று துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் ராஜினாமா செய்ய வேண்டும் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலையில் தங்கி இருந்த வட மாநில தொழிலாளர்கள் மீது பெட்ரோல் கொண்டு வீசப்பட்டுள்ளது அவர்களை உயிரோடு எரித்துக் கொள்ள முயற்சி நடந்துள்ளது ஆனால் தற்போது அக்கம்பக்கத்தினரின் முயற்சியால் அவர்களை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள்.
இது போன்ற பிரச்சனைகளை நீங்கள் கேள்வியாக எழுப்பியவர்கள் என்ற காரணத்திற்காக முதல்வர் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுக்கின்றார்.
இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

 

எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் ஜெ.சீனிவாசன்

 

இந்த பேட்டியின் போது முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், சிவபதி டாக்டர் விஜயபாஸ்கர், வளர்மதி, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் குமார், வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி,முன்னாள் எம்பி ரத்தினவேல், எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர்கள் சீனிவாசன்,பொன் செல்வராஜ் , மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன், வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சிந்தாமணி முத்துக்குமார்,
கவுன்சிலர்கள் அரவிந்தன், அம்பிகாபதி,
இன்ஜினியர் இப்ராஹீம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். முன்னதாக திருச்சி வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிறகு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். இதைத்தொடர்ந்து சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு அங்கிருந்து கார் மூலம் தஞ்சை சென்று அங்கு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு இரவு திருச்சி விமான நிலையம் சென்னை கிளம்பினார் எடப்பாடி பழனிச்சாமி.

Leave A Reply

Your email address will not be published.