திருச்சி அருகே பரிதாபம் :
மது குடிக்க தடை விதித்ததால் வாலிபர் தற்கொலை

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள பெரிய நெய்க்காரப்பட்டி சக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மகுடேஸ்வரன் இவரது மகன் லோகேஸ்வரன் (வயது 22). கல்லூரியில் படித்து வந்த இவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். பின்னர் ஊர் சுற்றி வந்த அவருக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இதனை அறிந்த அவரது பெற்றோர் கவலை அடைந்தனர். மேலும் மகனை கண்டித்ததோடு குடிப்பழக்கத்தை விட்டு விடுமாறு வலியுறுத்தினர்.மேலும் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் வெளியே சென்று மது அருந்த முடியாத நிலை ஏற்பட்டதால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான லோகேஸ்வரன் பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மகுடேஸ்வரன் வையம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.