காதல் தோல்வியால் மருந்து கம்பெனி விற்பனை பிரதிநிதி தற்கொலை.
திருச்சி மண்ணச்சநல்லூர் எதுமலை ரோடு புவனேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் சரவணன் (வயது 28).இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருந்து கம்பெனியில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார்.
இதன் இடையே ஒரு இளம் பெண்ணை அவர் காதலித்து வந்து உள்ளார்.
இந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சரவணன் கடந்த சில தினங்களாக மனமுடைந்து வேலைக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கி கிடந்தார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தனது தாயாரின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
இது குறித்து அவரது தாய் தேன்மொழி மண்ணச்சநல்லூர் போலீசில் புகார் செய்தார. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்ககொண்டு வருகின்றனர்.