அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்புகளின் படி திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் தொகுதியில் உள்ள
37.வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர் அனுசுயா ரவிசங்கரின் ஏற்பாட்டிலும்
அதனை தொடர்ந்து 43.வது வட்ட கழக. செயலாளர் வெங்கடேசன் அவர்கள் ஏற்பாட்டில் காட்டூர் ஐயங்கார் பேக்கரி அருகிலும்..
தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தலினை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.