போலி போர்வாளின் மனுவை பரிசீலித்தால் மாநகராட்சி ஆணையர் வீட்டின் முன் சாகும் வரை உண்ணாவிரதம்.பாஜக வர்த்தக பிரிவு திருச்சி மாவட்ட தலைவர் அறிக்கை.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வணிக போர்வாள் என்று தன்னை தானே சொல்லிக் கொள்ளும் டாக்டர்.கோவிந்தராஜு சிறு, குறுவணிகர்களை நசுக்க நினைக்கும் நரித்தனத்தை முறியடிப்போம். வாருங்கள் வணிகர்களே ! ஒன்றுபடுவோம்!!
வணிகமே செய்யாமல் வணிகர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து தன்னை வணிகர் என்று சொல்லிக்கொண்டு ஏசியில் வாழும் வணிகப் போர்வாளுக்குத் தரைக்கடை வணிகர்களின் வலியும் வேதனையும் தெரியுமா? போர்வாள் காலையிலிருந்து மாலை வரை தரைக்கடையில் உட்கார்ந்து வியாபாரம் பார்ப்பாரா? போலி போர்வாள் மனுவை மாநகராட்சி ஆணையர் பரிசீலனை செய்தால் அவரது இல்லத்தில் சிறு,குறு வணிகர்களுடன் இணைந்து சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் பாரதிய ஜனதா கட்சி. வர்த்தக பிரிவு குறித்து தெரிவிக்கிறேன்
என பாஜக திருச்சி மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் எஸ்.வி.பி.
சுவேந்திரன் தெரிவித்துள்ளார்.