திருச்சியில் அடையாளம் தெரியாத நபர் ரெயிலில் அடிபட்டு சாவு .
திருச்சி தேவதான பகுதி காவேரி பாலம் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் இறந்து கிடந்தார்
இது குறித்து தகவல் அறிந்து திருச்சி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன சுந்தரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆண் நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்த நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் எந்த ரெயிலில் அடிபட்டு இறந்தார்? என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.