Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்படாத மாநகராட்சி கட்டிடங்கள் மக்களை திரட்டி திறக்கப்படும்.தமிழ் புலிகள் கட்சியின் மண்டல செயலாளர் ரமணா அறிக்கை.

0

 

தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மண்டல செயலாளர் திருச்சி ரமணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 6 ல் உள்ள திம்முராய சமுத்திரம், கொண்டையம் பேட்டை தாகூர் ஆகிய பகுதிகளில் மக்களின் வரிப்பணத்தில் கட்டிய கட்டிடங்கள் ஒரு ஆண்டுகள் மேலாகியும் கட்டி முடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய கூடம் மற்றும் பொது கழிப்பிடம் இன்று வரை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையர் ஆகியோரிடம் புகார் கொடுத்தும் இன்று வரை திறக்கப்படவில்லை.
பல லட்சம் மதிப்புள்ள மக்கள் பணத்தை விரையம் செய்யும் மாவட்ட நிர்வாகத்தை திருச்சி மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கின்றேன். விரைவில் பொது மக்களை திரட்டி மக்களால் திறக்கப்படும் என தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மண்டல செயலாளர்
திருச்சி ரமணா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.