மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஐந்து மாத காலமாக காவிரி மேம்பால பணிகள் நடைபெற்று இறுதி கட்டதையடைந்துள்ளது. மேலும் காவிரி மேம்பாலத்தில் இறுதியாக தார் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏன் சிமென்ட் சாலை அமைக்கலாமே….? என்ற இயல்பான கேள்வி எழுகிறது.
ஏற்கனவே தார் சாலையும், செங்கலை வைத்து காவிரி மேம்பால கைப்பிடி சுவர் கட்டியதை மறந்துவிடவில்லை திருச்சி பொதுமக்கள். மேலும் பல்வேறு மேம்பாலங்களில் சிமென்ட் சாலை அமைக்கப்படும் பொழுது காவிரி மேம்பால மராமத்தில் மட்டும் ஏன் தார்சாலை…..
நெடுஞ்சாலைதுறை இன்ஜினியர்களுக்கு நாம் சொல்லி தாம் தெரியவேண்டுமா….???
என
கிஷோர்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.