Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி என் ஆர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் 40 வது வெற்றி விழா.

0

 

திருச்சி என்.ஆர். ஐ.ஏ. எஸ். அகாடமியில்
போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்
இயக்குனர் ஆர். விஜயாலயன்
.

திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் என்.ஆர்.,ஐ. ஏ. எஸ். அகாடமியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் மத்திய ,மாநில அரசுகள் நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த 19 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த அகாடமியில் இதுவரை 22,000 க்கு மேற்பட்டவர்கள் கல்வி பயின்று பல்வேறு அரசு பதவிகளில் உள்ளனர்.
இந்த அகாடமியின் 40 வது வெற்றி விழா நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமி அரங்கில் நடைபெற்றது.

விழாவுக்கு அகாடமி இயக்குனர் ஆர். விஜயாலயன் தலைமை தாங்கி வெற்றி பெற்ற தமது மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். அப்போது விடாமுயற்சி, கடின உழைப்பு இருந்தால் போட்டித் தேர்வுகளில் சாதிக்க முடியும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பணிக்கு செல்லும் நீங்கள் எந்த சூழலிலும் லஞ்சம் வாங்க கூடாது என கேட்டுக் கொண்டார். வெற்றியாளர்களும் லஞ்சம் வாங்க மாட்டோம் உறுதி ஏற்று கொண்டனர்.


நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பேசினர். இது பிற மாணவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாகம் செய்திருந்தது.

Leave A Reply

Your email address will not be published.