Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் வாலிபரை தாக்கி பணம், செல்போன் கொள்ளையடித்த 3. பேர் கைது.

0

ஸ்ரீரங்கத்தில் வாலிபரை கத்தியால் தாக்கி பணம், செல்போன் கொள்ளை
3 திருடர்கள் கைது -கத்தி, பொருட்கள் பறிமுதல்.

திருச்சி காட்டூர் கணேஷ் நகர் ராஜா தெருவை சேர்ந்தவர் முகிலன் .இவரது மகன் உதயன் (வயது 37). இவர் திருச்சி திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை சர்வீஸ் சாலையில் வாட்டர் சர்வீஸ் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று வாலிபர்கள் கத்தி முனையில் உதயனை மிரட்டி சரமாரியாக தாக்கி, பத்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 செல்போன்கள், லேப்டாப் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர் .இதில் தாக்கப்பட்ட உதயன் காயங்களுடன் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து உதயன் அளித்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். மேலும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருச்சி நவல்பட்டு கும்பக்குடியைச் சேர்ந்த வசந்த், திருவானைக்காவலை சேர்ந்த விக்கி, சந்தோஷ்குமார் ஆகிய மூன்று வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு செல்போன்கள், லேப்டாப் ,ரூ 7600 பணம் மற்றும் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மற்றொரு சம்பவம்.

மற்றொரு சம்பவத்தில் தனியார் உணவு நிறுவன டெலிவரி பாய் பெரம்பலூரை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் கத்தி முனையில் பணத்தை பறித்ததாக வசந்த், விக்கி, சந்தோஷ்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து இந்த வழக்கில் செல்போன், பணம் மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.