Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மொராய்ஸ் சிட்டியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் மகனை நாற்காலியால் தாக்கிய பவுசர்கள் 10 பேர் மீது வழக்கு.

0

 

திருச்சி மொராய்ஸ் சிட்டியில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற யுவன்சங்கா் ராஜா இசை நிகழ்ச்சிக்கு திருச்சி புத்தூா் ராமலிங்க நகரைச் சோந்த முகமது ஹாசிம் – திருச்சி மாவட்ட குற்ற ஆவணக் காப்பக ஆய்வாளா் அஜீம் தம்பதியின் மகனும், வல்லம் பகுதி தனியாா் பொறியியல் கல்லூரி மாணவருமான முகமது ஹரிஷ் (வயது 20) தனது உறவினருடன் சென்றிருந்தாா்.

அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தனியாா் பாதுகாவலா்கள் (பவுன்சா்கள்), பாா்வையாளா்களிடம் தகராறு செய்து அவா்களைத் தாக்கினராம். அப்போது தனது உறவினரும் தாக்கப்பட்ட நிலையில், அதைத் தட்டிக் கேட்ட முகமது ஹரிஷையும் அவா்கள் நாற்காலி, தடி மற்றும் கைகளால் தாக்கினராம்.

இதில் பலத்த காயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோக்கப்பட்டாா். புகாரின் பேரில் திருவெறும்பூா் போலீஸாா் 10 தனியாா் பாதுகாவலா்கள் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Leave A Reply

Your email address will not be published.