திருச்சியில் 2 பெண்கள்,தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் உள்பட 5 பேர் மாயம்.
திருச்சி புத்தூர் சோடா நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சிவசாமி இவரது மகள் கீர்த்தனா (வயது 20) இவர் உறையூர் சாலை ரோட்டில் உள்ள மார்க்கெட்டிங் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் வளர்மதி உறையூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதேபோன்று திருச்சி புத்தூர் சீனிவாசபுரம் தெற்கு முத்துராஜா தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் குமாரவேல் (வயது 35) சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பிறகு மீண்டும் குமரவேல் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் வளர்மதி உறையூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். திருச்சி மதுரை ரோடு குப்பாங்குளம் தனக்கோடிநாயக்கர் தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 63) சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் கொத்தனார் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் மீண்டும் விடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தம்பி பாபு என்பவர் கோட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன காமராஜரை தேடி வருகின்றனர்.

திருச்சி மருத்துவக் கல்லூரி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி விருது மனைவி சேது லட்சுமி ( வயது 67) குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்து வெளியேறிய இவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை இது குறித்து அவரது மகன் பிரபாகரன் கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சேது லட்சுமியை தேடி வருகின்றனர்
திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில்
சாமி கும்பிட சென்ற தெலுங்கானாவை சேர்ந்தவர் மாயம்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் கொண்டகுச்சி ரெட்டி (வயது 50). சம்பவதன்று இவர் திருவரங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய திருச்சி வந்தார். திருவரங்கம் தனது நண்பர் அறக்கட்டளையில் தங்கிருந்தார். பிறகு திருவரங்கம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற கொண்டகுச்சி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது குறித்து உறவினர் கிருஷ்ணா ரெட்டி திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்