நாடாளுமன்றத் தேர்தல் குறித்த பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் குமார் சிறப்புரை
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் கழகம் சார்பாக லால்குடி வடக்கு ஒன்றியத்தில் நாடாளுமன்றத் தேர்தல் 2024 பூத் கமிட்டி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் அசோகன் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அசோகன் தலைமை தாங்கினார்.
மாயகிருஷ்ணன், கேசவ ராஜன் வரவேற்புரை ஆற்றினார்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி, லால்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன். புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூராட்சி செயலாளர் ஜெயசீலன், பொன்னி சேகர், பாசறை செயலாளர் வீ டி எம் அருண், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஏ டி எம் டோமினிக், முன்னாள் அவை தலைவர் தர்மதுரை, பொதுக்குழு உறுப்பினர் விஜயா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.