Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பூட்டிய வீட்டை உடைத்து பொருட்கள் திருட்டு.

0

 

திருச்சி சீனிவாச நகரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் வெள்ளி பொருட்கள் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலை.

திருச்சி சீனிவாசன் நகர் 1-வது கிராஸ் ஈடன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து.
இவரது மகன் முத்துக்குமார் (வயது 41 ).இவர் பொங்கல் பண்டிகையையொட்டி தனது சொந்த ஊரான தேவகோட்டைக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார்.

நேற்று வீடு திரும்பினார். இங்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது தங்க நாணயங்கள், குங்குமச்சிமிழ், வெள்ளி குத்துவிளக்கு, வெள்ளி கிண்ணம், வெள்ளி அரணைக் கயிறு மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவை திருடு போயிருந்தது.

இது குறித்து முத்துக்குமார் திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.