திருச்சி 48வது வார்டு கவுன்சிலர் கொட்டப்பட்டு தர்மராஜ் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா.
திருச்சி 48 வது வார்டு கவுன்சிலர் திமுக பொன்மனை பகுதி செயலாளருமான கொட்டப்பட்டு தர்மராஜ் தலைமையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள வார்டு கவுன்சிலர் அலுவலகம் (படிப்பகம்) முன்பு சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு தெற்கு மாவட்ட மாநகர செயலாளர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் இஸ்லாமிய ஜமாத் தலைவர் அப்துல் ரஹீம், ஜாஃபர் அலி,பங்குத்தந்தை வினோத்,வட்ட செயலாளர்கள் ஜமால் தமிழ் மணி, முருகானந்தம், வரதன், சுப்ரமணி, பரமசிவம்,முருகன்,மாவட்ட பிரதிநிதி கோபி பகுதி நிர்வாகிகள் ஜெகதாம்பாள், அருள்மொழி, தியாகு, ஏசுதாஸ், சுரேஷ், வெங்கடேஷ், குமார், தேவா, சுரேஷ்குமார் உள்பட பலர் கொண்டனர்.
முன்னதாக அரசர் சிலம்பாட்ட கழகம் சார்பில் மாணவ, மாணவிகளின் சிலம்பம் நடைபெற்றது.