திருச்சியில் திருட்டு வழக்கில்
மூதாட்டி கைது.
திருச்சி அருகே திருட்டு வழக்கில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்த நகை மீட்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் பகுதியில் தனிப்படை போலீஸார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர் லால்குடி அருகேயுள்ள புள்ளம்பாடி பகுதியைச் சேர்ந்த தி.காந்தி (வயது60) என்பதும், அவர் திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 3 பவுன் நகையை மீட்டுள்ளனர்.