Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எ.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தண்ணீர் அமைப்பு சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்ச்சி.

0

எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருச்சி மாநகராட்சி மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

போகி பண்டிகையை முன்னிட்டு தேவையில்லாத பொருட்கள் துணிகள்,டையார்கள், பழைய புத்தகங்கள், எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டாம் என்றும், நமக்கு தேவையில்லாத பொருட்கள் மற்றவர்களுக்கு பயன்படும் பொருளாக இருக்கலாம் , மறுசுழற்சிக்கு பயன்படக்கூடிய பொருட்களை தூய்மை பணியாளர்கள், விற்று பணப்பயன் பெறுபவர்கள் . எனவே தேவையற்ற பொருட்களை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் அவற்றை திருச்சி மாநகராட்சி வாகனத்திலோ அல்லது வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தினர்.

தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம், தண்ணீர் அமைப்பு இணை செயலாளர் ஆர்.கே.ராஜா, 57வது மாமன்ற உறுப்பினர் தி.முத்து செல்லம், தலைமையாசிரியர் ஹ.புஷ்பலதா, ஆசிரியர்கள் செல்வி, ராஜசுலா, ஜெயராணி, மற்றும் மாணவ, மாணவிகள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.