Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பெட்டவாய்த்தலையில் விடியா திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். முன்னாள் அமைச்சர்கள் பரஞ்ஜோதி, வளர்மதி கண்டன பேருரை.

0

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க…

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், சிறுகமணி பேரூராட்சி அஇஅதிமுக சார்பில் பெட்டவாய்த்தலையில் இன்று (16.12.22, வெள்ளிக்கிழமை) விடியா திமுக அரசின் மக்கள் விரோத செயல்களான,

சட்ட ஒழுங்கு சீர்கேடு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மற்றும் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்தும்,

அம்மா அரசின் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறுத்தியதைக் கண்டித்தும்,

கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தும் அவற்றை நிறைவேற்றாத செயலைக் கண்டித்தும், நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி கலந்து கொண்டு கண்டன பேரூரையாற்றினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் சிறுகமணி பேரூர் கழக அவைத் தலைவர் கனகராஜ் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் நடந்தது.

இந்நிகழ்வில் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி,சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், ஒன்றிய கழகச் செயலாளர்கள் கோப்பு நடராஜ், ஜெயக்குமார், ஜெயராமன், பொருளாளர் ராஜகோபால் மாவட்ட பாசறை செயலாளர் விவேக், ரகுபதி, கே.பி.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு , அரவிந்த், திருப்புகழ் மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள் கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மகளிரணியினர், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.