திருச்சியில் காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி : ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்பு.
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை திருச்சி மாநகராட்சி, தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம், பள்ளிக்கல்வித்துறை, தேசிய மாணவர் பசுமை படை மாணவியர் இணைந்து நடத்திய காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி சத்திரம் பஸ் நிலையம் தேசிய கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
இப்பேரணிக்கு மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி முன்னிலையில் பேரணியை தொடங்கி வைத்தார்.
மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி குணசீலன், மாவட்ட கல்வி அலுவலர் செல்வம், முதுகலை ஆங்கில ஆசிரியர் பாலசுப்பிரமணியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பாரூக், பசுமை ஜேசுராஜ் திரவியம், உதவி வன பாதுகாவலர் சம்பத்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் படை ஒருங்கிணைப்பாளர் கரோ கோரி, சகாயராஜ், பட்டதாரி ஆசிரியர் அந்தோணி
லூயிஸ்
,
மாநகராட்சி நிர்வாக பொறியாளர் குமரேசன், கோட்டை போலீஸ் சப்
இன்ஸ்பெக்டர் கந்தசாமி, இடைநிலை பொறியாளர் ரவி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஐ.ஆர். மேல்நிலைப்பள்ளி, பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் கல்லூரி மேல்நிலை டவுன்ஹால் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் தேசிய பசுமைப்படை பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் காவல் துறை போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்
.