Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பொன்மலை சதர்ன் ரயில்வே பென்சனர்கள் சங்கத்தின் புதிய தலைவராக கணேஷ் நியமனம்.

0

 

பொன்மலை சதர்ன் ரயில்வே பென்சனர்கள் சங்கத்தின் மாதாந்திர கூட்டத்தில் புதிய தலைவராக கணேஷ் நியமிக்கப்பட்டார்

பொன்மலை, சதர்ன் ரயில்வே பென்சனர்கள் சங்கத்தின் மாதாந்திர கூட்டம், பொன்மலைப்பட்டி சங்க அலுவகத்தில் நடந்தது.
பெரும்பான்மையான செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார்கள்.
செயல் தலைவர் கணேஷ் தலைமை ஏற்றார்கள்.

கூட்டத்தின் துவக்கத்தில், பொன்மலை, சதர்ன் ரயில்வே பென்சனர்கள் சங்கத்தின் சமீபத்தில் மறைந்த முன்னாள் தலைவர் கோபாலன் படம் திறந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.
மேலும், முன்னாள் தலைவர் மறைந்த கோபாலனின் சேவை மனப்பாண்மை, ஆளுமைத்திறன் மற்றும் உபசரிக்கும் பண்பு பற்றி செயல் தலைவர். செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.

தொடர்ந்து மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. செயலாளர் தனது உரையில், சங்கத்திற்கு தலைவர் அவசியம் என்றும், தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும், ஆகவே செயல் தலைவர் கணேஷ்அவர்களை தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்தார்கள்.
செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் செயலாளரின் கருத்தை ஆமோதித்து இசைவு அளித்தார்கள்.

பொருளாளர் மகேந்திரன் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர மருத்துவ உதவித் தொகை, எந்த நிபந்தனையும் இல்லாமல் அனைவருக்கும் வழங்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்கள். மேலும், அக்டோபர் மாத வரவு செலவு கணக்கை வாசித்தார்கள்.

அதனை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டார்கள்.
முன்னாள் தலைவர் கோபாலன் தன் இறுதி காலத்தில் சென்னையில், தன் மகன் வீட்டில் தங்கி மருத்துவம் பெற்று வந்தார்கள். அவர் காலமானதை அடுத்து இறுதி சடங்குகள் சென்னையிலேயே நடைபெற்றது. சங்கத்தின் சார்பாக பழனிவேல் நேரில் சென்று மறைந்த தலைவர் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். பழனிவேல் அவர்களுக்கு சங்க செயலாளர் பாராட்டும். நன்றியும் தெரிவித்தார்கள்.

உதவி செயலாளர் ரவிச்சந்திரன் அவர்கள் நன்றியுரை கூற கூட்டம் நிறைவு பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.