Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி. அன்னதானம், நலத்திட்டங்கள் வழங்க மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் வேண்டுகோள்.

0

அதிமுக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் அமைச்சர், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ ஆகியோரின் ஆணைக்கிணங்க முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு முன்னிட்டு அஞ்சலி நாளை 05-12-2022 திங்கள் கிழமை காலை 10.00 மணி அளவில் திருச்சி கோர்ட் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். திருஉருவ சிலைக்கு அருகில் ஜெயலலிதாவின் திருஉருவ படம் அலங்கரித்து திருச்சி அ.இ.அ.தி.மு.க. மாநகர் மாவட்ட சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட உள்ளது.

மேலும் திருச்சி மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதிகளில் உள்ள அனைத்து வட்ட கழகத்திலும் அம்மா அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டம், அன்னதானம் ஏற்பாடு செய்து வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அதுசமயம் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட கழக, பகுதி கழக, வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், மாண்புமிகு அம்மா பேரவை.எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு. இலக்கிய அணி, மருத்துவ அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்தவர்கள், வர்த்தக அணி, கலை பிரிவு. முன்னாள் கோட்டத் தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள். கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குநர்கள், தலைமை கழக பேச்சாளர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம் என திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.