Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மரம் வெட்டிய போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

0

திருச்சியில் மரம் வெட்டிய போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அரசன் என்கிற செல்வம். (வயது 45). இவர் திருச்சி கண்டோன்மெண்ட் பென்வெல்ஸ் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மூங்கில் மரத்தை வெட்டிக் கொண்டிருந்தார். மரம் வெட்டும் போது மின்சார லைனில் பட்டு இவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் காயமடைந்த அவரை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் டாக்டர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து அவரது மனைவி காத்தாயி கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.