Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அரியமங்கலம் மண்டல குழு கூட்டம்.தன்னிச்சையாக செயல்படும் உதவி ஆணையரை கண்டித்து அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன் வெளிநடப்பு.

0

திருச்சி அரியமங்கலம் கோட்ட
உதவி ஆணையரைக் கண்டித்து அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன் உள்ளிட்ட
கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

திருச்சி மாநகராட்சி 2 ஆவது மண்டலக்குழு கூட்டத்தில், உதவி ஆணையரைக் கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாநகராட்சி 2வது மண்டலக்குழு (அரியமங்கலம் கோட்டம்) கூட்டம் பாலக்கரையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. மண்டலக்குழுத் தலைவர் தலைமை வகித்தார்.

மாநகராட்சி, அரியமங்கலம் கோட்ட உதவி  ஆணையர் அக்பர்அலி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த, 47 ஆவது வார்டு கவுன்சிலர் செந்தில்நாதன் பேசுகையில்,
உதவி ஆணையர், கவுன்சிலர்கள் கூறும் எந்த புகார்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும் பொது மக்கள் கோரிக்கைகள், குறைகள் தெரிவித்தாலும், மனு அளித்தாலும் அதை பரிசீலிப்பதும் கிடையாது. ஏராளமான மனுக்கள் கிடப்பில் உள்ளன. பணியாளர்கள், பொதுமக்களை கண்ணியக்குறைவாவும் நடத்துகிறார். உயர் அதிகாரிகளிடம் இது குறித்து புகார் தெரிவித்தும், அவரது நடவடிக்கையில் மாற்றம் இல்லை எனக் குறிப்பிட்டார். மேலும் உதவி ஆணையரின் தன்னிச்சையான இப்போக்கைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி, கூட்ட அரங்கை விட்டு அவர் வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து இதே புகார்களை முன்வைத்து திமுக கவுன்சிலர்கள் சண்முகப்பிரியா, ரிஸ்வா பானு, கீதா, மதிமுக கவுன்சிலர் கதீஜா, சுயேச்சை கவுன்சிலர் எல்ஐசி சங்கர் உள்ளிட்டோரும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சக கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் வெளிநடப்பு செய்தவர்களிடம்  சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கூட்டத்தில் உதவி ஆணையர் இருந்தால் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம். அவரை வைத்துக் கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றவும் மாட்டோம் என்று கவுன்சிலர்கள் கறாராக தெரிவித்தனர். இதனையடுத்து வேறு வழியின்றி உதவி ஆணையர் அக்பர் அலி கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினார். பின்னர் உதவி ஆணையர் இல்லாமல், மண்டல குழு தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்று, முன்வைக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

அரியமங்கலம் கோட்டத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.