திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப் பணித்துறை மற்றும் வாஸன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் மாத்தூர் அரசு சிறப்பு மேல் நிலைப் பள்ளியில் மாணவர்களுக்காக நடைபெற்றது.
இம்முகாமில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வசந்தா மல்லிகா துவக்க உரை வழங்கினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப் பணித்துறை இணை பேராசிரியர் J.O.Jerida Gnanajane Eljo வாழ்த்துரை வழங்கினார்.
முகாம் ஒருங்கிணைப்பாளர் Sundharraj சிறப்புரை வழங்கினார்.
இம்முகாமினை பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப் பணித்துறை இணை பேராசிரியர் J.O.Jerida Gnanajane Eljo ,முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி சாந்தினி மற்றும் வாஸன் கண் மருத்துவமனை குழு இணைந்து சிறப்பாக நடத்தினர்.
இம்முகாமில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.