திருமணம் ஆகாத விரக்தி:
திருச்சியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை.
திருச்சி பொன்மலைப்பட்டி நேரு வீதி கருத்தசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சூரிய நாராயணன், இவரது மகன் சீனிவாசன் (வயது 38). திருமணமாகவில்லை. குடி போதைக்கு அடிமையானவர்.
இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார் .இந்நிலையில் சம்பவத்தன்று சீனிவாசன் விஷம் குடித்தார் .அவரை உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் .
ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தாய் ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் பொன்மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.