Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து வீரசேகரன் தலைமையில் எஸ்.ஆர்.எம்.யூ வினர் ஆர்ப்பாட்டம்.

0

 

பொன்மலை பணிமனை முன்பு இன்று
அக்னிபத் திட்டத்தை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசின் அக்னி பத் திட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் களமிறங்கியுள்ளன.
இந்த நிலையில் எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் திருச்சி பொன்மலை பணிமனை முன்பு இன்று இந்திய திருநாட்டை காக்க இராணுவப் பணியில் இணைவதே வாழ்நாள் கனவாக வாழும் இளைஞர்களின் இலட்சியக் கனவை தவிடுப்படியாக்கும் அக்னிபத் திட்டத்தை உடனே கைவிடக் கோரியும்,

ராணுவ பணியை ஒப்பந்த கால பணியாக மாற்றும் மத்திய அரசு நாளை நிரந்தர ரயில்வே பணிகளையும் குறுகிய கால பணியாக மாற்றுவதை தடுத்து நிறுத்தவும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யூ.
கோட்ட செயலாளர், துணை பொதுச் செயலாளர் எஸ். வீரசேகரன் தலைமை தாங்கினார்.

இதில் ஏராளமான ரயில்வே தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது இன்று ராணுவத்திற்கு வந்துள்ள நெருக்கடி நாளைக்கு நம் ரயில்வேக்கு வரும் என எச்சரிக்கை விடுத்து கண்டன கோஷம் எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.