Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து முடிவெடுத்தால் அதிமுகவை 200 ஆண்டுகள் ஆனாலும் அழிக்க முடியாது.திருச்சி முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர்.

0

 

அதிமுகவில் தற்போது நடைபெற்று வரும் சூழ்நிலை குறித்து திருச்சி கோ அபிஷேகபுரம் முன்னாள் கோட்ட தலைவர் ஞானசேகர் கூறியதாவது:-

தற்போது அதிமுகவில் தற்போது நான் எந்த பொறுப்பிலும் இல்லை. இதனால் நான் எந்தகருத்தும் கூடாது.

இருந்தாலும் பொதுவாக சொல்வதென்றால் சிலரின் தனிப்பட்ட சுயநலத்திற்காக இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரிடம் ஒற்றை தலைமை பற்றி கூறி உள்ளனர்.

இதனை உணர்ந்து இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவர் மட்டும் ஒன்றாக அமர்ந்து தங்களது எண்ணங்களை பேசி ஒருமித்த நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

ஏனென்றால் புரட்சித்தலைவர் தொடங்கிய கட்சியினை புரட்சித்தலைவி எண்ணமுடியாத வளர்ச்சிக்கு கொண்டு சென்றுள்ளார்.

கட்சியில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் கட்சிக்கு பலம்.கட்சியிலிருந்து யார் விலகினாலும் எதிரிகளுக்கு தான் பலம்.இருவரும் எடுக்கு நல்ல முடிவு அதிமுகவில் பிரிவினை ஏற்படுத்த நினைக்கும் மாற்று கட்சியினர் மூஞ்சியில் கரியை பூச வேண்டும்.

உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் கட்சியில் பிரிவினை எதிர்பார்க்க மாட்டார்கள்.

இபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் இணைந்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பு.இது நடந்தால் புரட்சித்தலைவி அம்மா சொன்னது போல் அதிமுகவை நூறு ஆண்டுகள் இல்லை 200 ஆண்டுகள் ஆனாலும் யாராலும் அழிக்க முடியாது.

இதுதான் எனது கருத்தும் என கூறினார் முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர்.

Leave A Reply

Your email address will not be published.