Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

0

திருச்சி
உலகநாதபுரம்
முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா.
காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் 70 -ஆம் ஆண்டு தேர் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் நேற்று இரவு தொடங்கியது.

முன்னதாக முத்துமாரியம்மன் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதி உலா வந்து பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது..

நாளை (6ந் தேதி) இரவு 8.30 மணிக்கு தேர்த்திருவிழா நடக்கிறது.

கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து உற்சவ அம்மன் புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கல்லுக்குழி, என்.எம். கே காலனி வழியாக வீதி உலா வந்து உலகநாதபுரம் அம்மன் கோவிலை வந்தடையும்.

7 -ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு காவிரியாறு அய்யாளம்மன் படித்துறையில் இருந்து பால்காவடி, அக்னிச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடையும். ‘தொடர்ந்து காலை 11 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும் .
மதியம்
12 மணிக்கு அம்மனுக்கு கஞ்சி வார்க்கப்படும். மாலை 4 மணிக்கு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு செல்வ விநாயகர் கோவிலில் இருந்து அம்மனுக்கு முளைப்பாரி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.

8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு சங்கிலி ஆண்டவர் கோவிலில் சுத்த பூஜை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 3 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

9 -ம் தேதி காலையில் சங்கிலி ஆண்டவர் கோவிலில் பூஜை செய்து மதியம் உணவு திருவிழா நடைபெறும். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்து உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.