Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பிஸ்கட் கம்பெனி லோடுமேன் கார் மோதி சாவு.

0

திருச்சி எடமலைப்பட்டி புதூரில்
பிஸ்கட் கம்பெனி லோடுமேன் கார் மோதி சாவு.

திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்தவர் அழகர். இவரது மகன் சுரேஷ் (வயது 31). இவர் எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரா நகரில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் சுரேஷுக்கு வலது கால் தொடையில் பலத்த காயம் பட்டது .உடனே அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் சுரேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று அதிகாலை இறந்தார். இதுகுறித்து சுரேஷின் மனைவி தாயம்மாள் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர் திருச்சியில் உள்ள ஒரு பிஸ்கட் கம்பெனியில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.